சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்..!!!
சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாத முக்கியமான செயல்கள்:
1. சாப்பிட்ட உடனேயே தண்ணீரை வயிறு முட்ட குடிக்கக் கூடாது. இதனால் ஜீரணநீர் நீர்த்து போய் அஜீரணமாகும். நோய்கள் வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமையும். சிறுது நேரம் கழித்து தாகம் எடுக்கும் அப்போது குடிக்கவேண்டும்,
2. சாப்பிட்டதும் படுத்து விடக்கூடாது. ஏனென்றால், குடல் செயல்பட மிகவும் சிரமப்படும். ஜீரணம் முறையாக நடக்காது. குறைந்தது ஒரு மணிநேரம் கழித்தே உறங்க வேண்டும். இது மதியம் ஓய்வு எடுப்பவர்களுக்கும் பொருந்தும்.
3. சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது குறைந்தது 2 மணிநேரம் கழித்தே குளிக்க வேண்டும்.
4. சாப்பிட்டு முடித்ததும் எந்த பழங்களையும் சாப்பிடக்கூடாது. காரணம், உணவின் ஜீரண நேரம் குறைந்தது 5 மணிநேரங்களாகும். பழங்களின் நேரம் அதிகபட்சம் 2 மணி நேரம்தான். இந்த வித்தியாசத்தால் நாம் சாபிட்ட பழம் வாயுவாக மாற்றம் பெரும். இதில் ஒரு பழத்துக்கு மட்டும் விதிவிலக்கு அது பேரீச்சம்பழம்.
5. உணவு ஜீரணமாகாத நிலையில் வேறு உணவுகள் எதையும் உண்ணக்கூடாது. காரணம், இவ்வாறு சாப்பிட்டால் ஏற்கனவே சாப்பிட்ட உணவின் ஜீரணத்தை கடுமையாக பாதிக்கும். இதனால் சுகர் வர காரணமாக அமையும்.
6. குளிர்பானங்கள், ஐஸ்கீரீம், ஐஸ்வாட்டர் இவைகளையும் குடிக்கக் கூடாது. உணவு ஜீரணமாக நமது குடலில் வெப்பம் இருக்கவேண்டும். அந்த வெப்பத்தை இந்த குளிர்பானங்கள் இல்லாமல் செய்துவிடும்.
7. சாப்பிட்டதும் பரபரப்பாக இயங்குவதோ, நடப்பதோ, பளுவானவற்றை தூக்கவோ கூடாது. அவ்வாறு செய்தால் உணவு கீழ்நோக்கி செல்லாமல் மேல் நோக்கி வரும். இதனால் நெஞ்சு எரிச்சல், வாயு தொல்லைகள் ஏற்படும்.
உணவே மருந்து.. மருந்தே உணவு.. என்று இருக்கையில் அந்த உணவையும் முறைப்படி எடுத்துவந்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
newstm.in