மீண்டும் உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை... சவரனுக்கு ரூ.528 அதிகரிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக ஏற்றம் கண்டுவந்த தங்கத்தின் விலை ,நேற்று சற்று சரிந்ததையடுத்து, இன்று மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.66 உயர்ந்து, ரூ.3,929க்கு விற்பனையானது.
நேற்று தங்கம் ஒரு சவரன் 30,904 விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.528 உயர்ந்து, ரூ.31,432க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in