100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கண்டெய்னர்
வேலூர் அருகே 100 அடி பள்ளத்தில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார்.
மங்களூரில் இருந்து, சென்னைக்கு மைதா லோடு ஏற்றிக்கொண்டு வந்த கண்டெய்னர் லாரி இன்று அதிகாலை தமிழக-ஆந்திர எல்லையான பேரணாம்பட்டு மலைப்பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் லாரி ஓட்டுநர் பஷீர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
newstm.in