1. Home
  2. தமிழ்நாடு

மாணவனின் பிறப்புறுப்பைப் பிடித்த ஆசிரியர்கள்! தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் மாணவன்!

மாணவனின் பிறப்புறுப்பைப் பிடித்த ஆசிரியர்கள்! தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் மாணவன்!

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர் வகுப்பறையில் அதிகம் சேட்டை செய்தாக கூறப்படுகிறது. ஒழுங்கீனமாக பள்ளியில் இருப்பதோடு, பள்ளிக்கு செல்போன் எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் மாணவரை தண்டிக்க முடிவெடுத்துள்ளனர்.

அதன்படி வகுப்பறையின் கதவைப் பூட்டிவிட்டு பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் இணைந்து மாணவரின் பிறப்புறுப்பை பிடித்து துன்புறுத்தியுள்ளனர். இதனால் அவரது பிறப்புறுப்பில் அதிக வலி ஏற்பட்டு மாணவர் துடித்துள்ளார். இதையடுத்து வீட்டிற்கு வந்த அவர், பெற்றோருடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பெற்றோர்களிடையேயும், மாணவர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like