1. Home
  2. தமிழ்நாடு

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை.. குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.4 லட்சம் பரிசு

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை.. குற்றவாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் ரூ.4 லட்சம் பரிசு

குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இரவு 10 மணியளவில் சோதனை சாவடிக்கு வந்த 2 நபர்கள் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இது தொடர்பான கண்காணிப்பு கேமிராவில் பதிவான உருவங்கள் அப்துல் சமீம் (வயது 25) மற்றும் தவுபீக் (27) ஆகியோராக இருக்கலாம் என்று தெரிவித்தனர்.

மேலும் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். இருவரும் குமரி மாவட்டம் தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு மற்றும் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுன்கொன்ற அப்துல் சமீம், தவுபீக்கை பிடிக்க இருமாநில போலீசாரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்துல் சமீம், தவுபீக் இருவரின் உருவப்படங்கள் அச்சிடப்பட்டு அவர்களைப் பற்றிய தகவல் தருவோருக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும், கேரள போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

இந்த அறிவிப்பு அடங்கிய போஸ்டர்கள் கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது. தலைமறைவான இருவரும் கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லலாம் என்றும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது. அங்கும் இருவரின் படங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்காக 10-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தமிழக-கேரள எல்லை பகுதியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். இவர்கள் இருவர் குறித்தும் தகவல் தெரிந்தால் தக்கலை துணை கண்காணிப்பாளர் போன்: 9498101914, 04651- 250741, களியக்காவிளை காவல் நிலையம் 04651- 244485 , குமரி மாவட்ட கட்டுப்பாட்டுஅறை 04652- 220417 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபிக் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத்பெக் ராவும் அறிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like