1. Home
  2. தமிழ்நாடு

தெலங்கானா உயர்நீதிமன்றத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்..!

தெலங்கானா உயர்நீதிமன்றத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படை வீரர்கள்..!

தெலங்கான நீதிமன்ற வளாகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு படைவீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர்.
ஆக்டோபஸ் என அழைக்கப்படும் படைவீரர்கள் சுமார் 50 பேர் நவீனரக துப்பாக்கியுடன் நீதிமன்ற வளாகத்தை சுற்றி நின்றனர்.

பின்னர் பயங்கரவாதிகள் அல்லது தாக்குதல் நடத்தும் வகையில் நபர் ஒருவர் நுழைந்தால் எதிர்கொள்வது குறித்தும் பதிலடி கொடுப்பது குறித்தும் ஒத்திகை மேற்கொண்டனர். நீதிமன்ற வளாகத்தில் இரவு நேரத்தில் படை வீரர்கள் இந்த ஒத்திகையை மேற்கொண்டனர்.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கியுடன் படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டது அறியாத அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் இவை ஒத்திகை என அறிந்தபின்னர் மக்கள் நிம்மதியடைந்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like