சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்
சென்னையில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் நாளை இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா தெரிவித்துள்ளார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை என 2- ஆம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் 6- ஆம் தேதி திறக்கப்பட்டதால் பாட திட்டத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சிக்கல் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகள் நாளை செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14-ம் முதல் ஜனவரி 17-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
newstm.in