வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்
வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முதலமைச்சர் பழனிசாமி உலகத் தமிழர்களின் நன்மதிப்பை பெற்றதை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என விமர்சித்தார். மேலும், வெள்ளை அறிக்கை கேட்டவர்கள் முதலமைச்சர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும் என்றும், தமிழக அரசின் நிலைத்தன்மை, சட்டம், ஒழுங்கு போன்றவற்றால் தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in