பஞ்சமி நிலம் என்பதற்கு ஆதாரம் இல்லை: ஆர்.எஸ்.பாரதி
முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Nov 20, 2019, 00:10 IST
| முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தேசிய பட்டியலினத்தவர் ஆணைய துணை ஆணையர் முன் ஆஜரான பின் ஆர்.எஸ்.பாரதி அளித்த பேட்டியில், ‘சீனிவாசனிடம் முரசொலி இடம் பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. முரசொலி நிலம் தொடர்பாக எங்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த சீனிவாசன் அவகாசம் கேட்டுள்ளார். முரசொலி நில விவகாரத்தில் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தலையிட உரிமையில்லை. ஸ்டாலினின் வளர்ச்சி பிடிக்காமல் அரசியல் ரீதியாக அவதூறு செய்கின்றனர்’ என்றார்.
newstm.in
newstm.in