ஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர்.... நடவடிக்கை எடுக்க ஆளுநர் வலியுறுத்தல்
காமராஜ் நகர் பிரச்சாரத்தின்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
Oct 20, 2019, 19:10 IST
| காமராஜ் நகர் பிரச்சாரத்தின்போது ஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி காமராஜ் நகரில் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் ஹெல்மெட் அணியாமல் சென்றதை சுட்டிக்காட்டி சமூகவலைதளத்தில் ஆளுநர் கிரண்பேடி பதிவு ஒன்றை இட்டுள்ளார். அப்பதிவில், ‘காமராஜ் நகர் பிரச்சாரத்தின்போது இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற முதலமைச்சர் நாராயணசாமி மீது காவல்துறை தலைவர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.
newstm.in
newstm.in