தமிழக அரசியல்வாதிகளே நன்றிகெட்டவர்கள்: பொன்.ராதா விளக்கம்
ஒட்டு மொத்த தமிழர்களையும் நன்றி கெட்டவர்கள் என கூறவில்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ரதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " ஒட்டு மொத்த தமிழர்களையும் நன்றிகெட்டவர்கள் என கூறவில்லை. தமிழ் மொழியை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யும் அரசியல்வாதிகளே நன்றி கெட்ட தமிழர்கள் எனவும் தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நபர்களை அரவணைக்க தயாராக இல்லாத அரசியல்வாதிகளே நன்றிகெட்டவர்கள் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
Newstm.in
newstm.in