‘கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’
இடைத்தேர்தலில் ஆதரவு இல்லை என அறிவித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்ததாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பதில் அளித்தார்.
newstm.in
newstm.in