ராகுல் காந்தி விரைவில் காங்., தலைவராவார்: திருநாவுக்கரசர்
ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
Oct 7, 2019, 18:15 IST
| ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், " பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஒரே தலைவர் ராகுதல் காந்தி தான் என்றும், அவர் விரைவில் காங்கிரஸ் தலைவராவார் எனவும் கூறினார். எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் திமுக கூட்டணி தொடரும் என தெரிவித்தார். அதிமுகவில் கள பணியை விட பண பணியே அதிகம் நடப்பதாக விமர்சித்த திருநாவுக்கரசர், ரஜினிகாந்த் தனியாகத்தான் கட்சி தொடங்குவார் என்றும் வேறொரு கட்சியில் சேர்ந்து பணியாற்றமாட்டார் எனவும் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in