‘ஓபிஎஸ்-ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை தர வேண்டும்’
அதிமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் இப்போது இருக்கும் தலைமையை உயர்த்திப் பேச வேண்டும் எனவும்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
Nov 24, 2019, 19:12 IST
| அதிமுகவினர் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு சமமான மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதாவை போல் இப்போது இருக்கும் தலைமையை உயர்த்திப் பேச வேண்டும் எனவும்,அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அவர்கள் வருவர், இவர்கள் வருவர் என கூறுகிறார்கள்; யாரும் வரமாட்டார்கள்; வந்தாலும் சேர்ப்பதாக இல்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. யாருமே இல்ல என்றால்தான் வெற்றிடம்; இப்போது எந்த வெற்றிடமும் இல்லை. ரஜினி - கமல் பற்றி கவலைப்பட வேண்டாம்; அவர்கள் ஒன்றுமில்லாமல் போய்விடுவார்கள்’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in