பள்ளி துவங்கியவுடன் மடிக்கணினி, சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Nov 25, 2019, 20:40 IST
| வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘அடுத்த ஆண்டில் அரசு பள்ளிகளில் 5 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர வாய்ப்புள்ளது. இன்பர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜிக்காக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் கணினிமயமாக்கப்படும். புதிய பாடத்திட்டங்களை படித்தாலே நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எழுத முடியும்’ என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in