அருண் ஜெட்லி மறைவு பாஜகவுக்கு பேரிழப்பு: ஓ.பி.எஸ்
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவு பாஜகவிற்கு பேரிழப்பு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Aug 25, 2019, 17:31 IST
| முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மறைவு பாஜகவிற்கு பேரிழப்பு என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லி பாஜக தலைமையகத்தில் வைக்கப்பட்டுள்ள அருண்ஜெட்லி உடலுக்கு மரியாதை செலுத்திய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அருண் ஜெட்லி மறைவு பாஜகவிற்கு பேரிழப்பு என தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பு, மரியாதை கொண்டிருந்தவர் என்றும், தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரும் பாலமாக இருந்தவர் அருண் ஜெட்லி எனவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in