ஹோட்டல் அறைக்குள் திடீரென புகுந்த வெந்நீர்.. 5 பேர் துடி துடித்து பலி
ரஷ்யா நாட்டில் இருக்கும் பெர்ம் (perm)என்ற நகரில் அமைத்துள்ளது ஹோட்டல் கேரமல். இந்த ஹோட்டல் குடியிருப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரு சிறிய இடத்தில் இயங்கி வருகிறது. இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டு இருந்த வெந்நீர் குழாய் திடீரென வெடித்து அங்கிருந்த அறைக்குள் வெள்ளம் போல் நுழைத்தது. இந்த விபத்தில் அங்கு தங்கி இருந்த 5 பேர் வெந்நீரின் தாக்கத்தால் உயிரிழந்தனர்.மேலும் 3 பேர் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in