1. Home
  2. தமிழ்நாடு

ஆபாச படத்தை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - சிக்கிய அரசியல் பிரமுகர் 

ஆபாச படத்தை காட்டி சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - சிக்கிய அரசியல் பிரமுகர் 

சென்னையில் 13 வயது சிறுமியிடம் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அதிமுக முன்னாள் பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி (68). அரசியல் பிரமுகரான இவர், தனது தெருவில் குடும்பத்துடன் வசித்து வரும் 13 வயது சிறுமியை தனது இல்லத்திற்கு அழைத்துச்சென்று செல்போனில் ஆபாச படத்தை காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி மாணவி நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள் 1098 ஹெல்ப் லைன்னை தொடர்புகொண்டு புகார் அளித்தனர். இதனையடுத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் காவல்துறையினர் ரவியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் சிறுமிக்கு ஆபாச படத்தை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனிடையே அவரை விடுவிக்கக்கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கலைந்து சென்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like