Logo

43 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டுகளை கணக்கிட உத்தரவு!

தமிழகத்தில் 43 வாக்குச்சாவடிகளில், வாக்கு எண்ணிக்கையின் போது, வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைசீட்டுகளை கணக்கிட தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

43 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டுகளை கணக்கிட உத்தரவு!

தமிழகத்தில் 43 வாக்குச்சாவடிகளில், வாக்கு எண்ணிக்கையின் போது, வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைசீட்டுகளை கணக்கிட தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் 46 வாக்குச்சாவடிகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், இந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி குளறுபடி நடந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார். இந்த 46 வாக்குச்சாவடிகளில், மூன்று வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமே தற்போது மறுவாக்குப்பதிவு அறிவிப்பு வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், மறுவாக்குப்பதிவு நடக்கவிருக்கும் 3 வாக்குச்சாவடிகள் தவிர, இதர 43 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது இந்த 43 வாக்குச்சாவடிகளில் இ.வி.எம் இயந்திரங்களை கணக்கில் கொள்ளாமல் வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகைசீட்டுகளை எண்ணிக் கணக்கிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

43 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் ஒப்புகைச்சீட்டுகளை கணக்கிட உத்தரவு!

மேற்குறிப்பிட்ட 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ள 3 வாக்குச்சாவடிகளின் விபரம்:

ஈரோடு தொகுதி(1) திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் உள்ள 248வது வாக்குச்சாவடி 

தேனி தொகுதி(2) ஆண்டிபட்டி வாக்குச்சாவடி எண் 67 - கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் வாக்குச்சாவடி எண் 197 - வடுக்கப்பட்டி சங்கரநாராயண இடைநிலைப்பள்ளி. 

இந்த மூன்றுடன், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட மேலும் 10 வாக்குச்சாவடிகள் சேர்த்து, தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் மே 19 அன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலும் வருகிற மே19ம் தேதி நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு?

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP