Logo

தமிழகத்தில் நாளை வரையில் வாக்கு எண்ணிக்கை தொடரும்! 

தமிழகத்தில் நாளை வரையில் வாக்கு எண்ணிக்கை தொடரும்!
 | 

தமிழகத்தில் நாளை வரையில் வாக்கு எண்ணிக்கை தொடரும்! 

தமிழகத்தில் கடந்த 27,30 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கைப் பணி முழுவதும்  முடிவடையாததால், இரவு முழுவதும் விடிய விடிய வாக்கு எண்ணிக்கைத் தொடரும் என்றும், அப்படியும் பணி முடியாத பட்சத்தில் நாளை வரையில் வாக்கு எண்ணிக்கை தொடர வாய்ப்பு உள்ளது என்றும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.

வாக்கு எண்ணும் ஊழியர்களை சுழற்சி முறையில் வாக்குகளை எண்ணுவதற்காக ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார் என்றும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP