இளம் மஞ்சள் நிற பட்டாடையில் அருள்பாலிக்கும் அத்திவரதர்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர் 35ஆம் நாளான இன்று இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருகிறது. நீரில் மூழ்கியிருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வெளியே வந்து 48 நாள்களுக்குப் பக்தர்களுக்கு அருள்புரிவதால், பெருமாளை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 34 நாட்களில் மட்டும் 45 லட்சத்திற்கும் அதிகமானோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். 35 ஆம் நாளான இளம் மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிகாலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
newstm.in
newstm.in