Logo

மெரினா பீச்சில் நடந்த அதிசயம்...உற்சாகமடைந்த பொதுமக்கள்...!

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் பீச்சில் பஞ்சு போல் பொங்கி வரும் நுரை படலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விளையாடி உற்சாகம் அடைந்தனர்.
 | 

மெரினா பீச்சில் நடந்த அதிசயம்...உற்சாகமடைந்த பொதுமக்கள்...!

சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் பீச்சில் பஞ்சு போல் பொங்கி வரும் நுரை படலத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விளையாடி உற்சாகம் அடைந்தனர்.

கடந்த நான்கு நாட்களாக கடற்கரை பகுதியில் நுரை பொங்கி வரும் நிலையில், மெரினா, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் கடற்பகுதியில் இரண்டு அடி உயரத்திற்கும் மேல் நுரை அதிகரித்துக் காணப்பட்டது.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடற்கரைக்கு வந்த பொதுமக்கள் நுரை படலத்தை பார்த்தவுடன் உற்சாகம் அடைந்து நுரை ஒருவர் மீது ஒருவர் அடித்துகொண்டு விளையாடினார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷத்துடன் விளையாடி மகிழந்தனர். இதில், சிலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.

மெரினா பீச்சில் நடந்த அதிசயம்...உற்சாகமடைந்த பொதுமக்கள்...!

ஆற்றில் அடித்து வரப்பட்டு முகத்துவாரத்தில் தேங்கியுள்ள ராசாயண கழிவுகள் கனமழை காலங்களில் அடித்து செல்லப்பட்டு மொத்தமாக கடலில் கலப்பதாலும், அலையின் வேகம் காரணமாகவும் நுரை உருவாவதாக கடல்நீர் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மெரினா பீச்சில் நடந்த அதிசயம்...உற்சாகமடைந்த பொதுமக்கள்...!

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP