ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று மாலை 7 மணி வரை கெடு
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இன்று மாலை 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Jan 29, 2019, 23:49 IST
|
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், இன்று மாலை 7 மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலி பணியிடங்களாக கருதப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் பட்டியலை தயாரித்து அனுப்பும் படி கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நளைக்கு பணிக்கு திரும்பும் ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
newstm.in
newstm.in