Logo

சின்னம் தெளிவாக இல்லை: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 | 

சின்னம் தெளிவாக இல்லை: உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கு!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவாக இல்லை என்று கூறி நாம் தமிழர் கட்சியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழம் (ஏப்.18) நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைவர் சீமான், அனைத்து பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திர மாதிரியில், நாம் தமிழர் கட்சியின் சின்னமான 'விவசாயி' சின்னம் தெளிவாக இல்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரியதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. எனினும், இவ்வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP