Logo

நாளை திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!!

நாளை 10ம் வகுப்புக்கு திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!!
 | 

திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஜனவரி 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையைக் காரணம் காட்டி 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட தாமதத்தால் 6ம் தேதி (நாளை) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளது.

திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!!
இந்நிலையில், 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பாக நடத்தப்படும் பயிற்சித் தேர்வுகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் நாளான 6ஆம் தேதி முதல் 13ஆம் தேதிவரை நடத்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியால் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

திடீர் தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!!

விடுமுறை முடிந்து பள்ளித் திறந்த அன்றே 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சித் தேர்வு என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இதே போல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, பள்ளிகள் திறப்புக் குறித்து குழப்பிய கல்வித்துறையின் இந்த நடவடிக்கையால் மாணவர்கள் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். மேலும், விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் உடனடியாக பயிற்சித் தேர்வுக்குத் மாணவர்களால் தயாராக முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP