பள்ளி மாணவி வகுப்பறையில் தூக்கிட்டு தற்கொலை
மதுரையில் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sep 6, 2019, 16:25 IST
| மதுரையில் பள்ளி மாணவி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பள்ளி வகுப்பறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அப்பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிலேயே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in