நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Aug 7, 2019, 17:23 IST
| நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கடந்த இரு தினங்கள் நீலகிரி மாவட்டத்தில் சில தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், இன்றும் மழை தொடர்வதால் உதகை, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
newstm.in
newstm.in