Logo

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக வேண்டும் என்ற சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
 | 

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராகத் தேவையில்லை: நீதிமன்றம்

அந்நிய செலவாணி மோசடி வழக்கில் சசிகலா ஆஜராக வேண்டும் என்ற சென்னை எழும்பூர் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

சசிகலா மீது அந்நிய செலவாணி மோசடி தொடர்பாக 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்கில் விசாரணையை 4 மாதத்தில் விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்ட நிலையில், எழும்பூர் நீதிமன்றம் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. 

அதாவது, சொத்துகுவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் இருக்கும் சசிகலா டிசம்பர் 13ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. 

தொடர்ந்து, இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மனு அளிக்கப்பட்டது.  இந்த வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாறாக காணொளி காட்சி மூலம் சசிகலா ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP