சேலம்: லாரி - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 4 பேர் பலி
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ ஒன்று மோதியது. இந்த விபத்தில் லாரி மற்றும் ஆட்டோவில் இருந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரஹ்மத் பாஷா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
May 26, 2019, 15:15 IST
| சேலம் மாவட்டத்தில் லாரி மீது ஆட்டோ ஒன்று மோதியதில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆட்டோ ஒன்று மோதியது. இந்த விபத்தில் லாரி மற்றும் ஆட்டோவில் இருந்த ரமேஷ், பாலு, சாதிக் பாஷா, ரஹ்மத் பாஷா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
newstm.in
newstm.in