‘ரூட் தல’ அலம்பலா? : இந்த எண்ணில் புகார் அளிக்கலாம்!
சென்னையில் பேருந்துகளில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு கொடுத்தால், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் புகார் அளிக்க வாட்ஸ்ஆப் எண்ணை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
Jul 30, 2019, 02:50 IST
| சென்னை மாநகர பேருந்துகளில் ‘ரூட் தல’ என்ற பெயரில் மாணவர்கள் பயணிகளுக்கு இடையூறு கொடுத்தாலோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ அதுதொடர்பாக புகார் அளிக்க வாட்ஸ் -அப் எண்ணை காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.
பேருந்துகளில் அராஜகத்தில் ஈடுபடுவோர் குறித்து 90875 52233 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் புகார் அளிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், Chennai City Police என்ற முகநூல் பக்கத்திலும், டுவிட்டர் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in