தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Nov 22, 2019, 18:58 IST
| தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; நகரில் ஒருசில பகுதிகளில் லேசான மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றது.
அதிகபட்சமாக சிதம்பரத்தில் 8 செ.மீ., கேளம்பாக்கத்தில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in