பழங்குடியினருடன் நடனமாடிய ராகுல்!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின நடனத்திருவிழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தானும் நடனமாடி கலைஞர்களை உற்சாகமூட்டினார்.
Dec 28, 2019, 15:06 IST
| சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின நடனத்திருவிழாவை தொடங்கி வைத்த காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, தானும் நடனமாடி கலைஞர்களை உற்சாகமூட்டினார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பழங்குடியின நடன திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கலந்து கொண்டு நடனத்திருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது மேடையிலேயே கலைஞர்கள் வந்து நடனமாடினர். ராகுல்காந்தியும் பழங்குடியினர் தொப்பி அணிந்தபடி மேளம் இசைத்தவாறு கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். மூன்று நாட்களுக்கு நடைபெறும் நடன திருவிழாவில் 25 மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்து 350 கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
Newstm.in
newstm.in