குழந்தையைக் கடித்துக் குதறிய வெறிநாய்! துணிச்சலாக காப்பாற்றிய இளைஞர்
சிறுவனை கடித்துக் குதறிய வெறிபிடித்த நாயிடமிருந்து காப்பாற்றிய இளைஞர்
Dec 26, 2019, 20:15 IST
| பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 4 வயதுக் குழந்தையுடன் தாய் ஒருவர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் நின்ற பிட்புல் வகையைச் சேர்ந்த நாய் திடீரென சிறுவனைக் கடித்துக் குதறியது.
இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் நாயிடமிருந்து சிறுவனைக் காப்பாற்ற போராடினார்.
ஒரு கட்டத்தில் குழந்தையை அங்கிருந்த காரின் மேற்கூரையில் குழந்தையை வைத்து விட, கோபமடைந்த அந்த நாய், குறிப்பிட்ட இளைஞரையும் கடித்துக் குதறியது.
ஒருவழியாக நாயிடமிருந்து தப்பிய அந்த நபர் தானும் காரின் மேற்கூரையில் ஏறி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நாயின் வெறியாட்டக் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
newstm.in