சபரிமலைக்கு 2 பெண்கள் சென்றதை எதிர்த்து கோவையில் போராட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இரண்டு பெண்கள் நேற்று சபரிமலைக்கு சென்று வழிப்பட்டதை எதிர்த்து இன்று கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.
newstm.in
newstm.in