திருச்சி சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
Aug 12, 2019, 21:20 IST
| திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர் வீரமணி (35). 7 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த இவர் நேற்று திருச்சி சிறையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கே.கே.நகர் போலீசார் வீரமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in