சிபிஎஸ்இ பள்ளிகளில் ஏழை மாணவர் சேர விண்ணப்பிக்கலாம்
இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
May 4, 2019, 22:20 IST
| இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கான இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மே 18-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
மேலும், ‘தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர் சேர்க்கை விண்ணப்பம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 60,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிக விண்ணப்பங்கள் வந்தால் குலுக்கல் முறையில் சேர்க்கை உறுதி செய்யப்படும். ஏழை மாணவர்களை சேர்க்க மறுக்கும் தனியார் பள்ளிகள் குறித்து புகார் அளிக்கலாம்’ என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
newstm.in
newstm.in