கர்நாடகாவில் 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
கர்நாடகாவில் காலியாகவுள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது.
சிவாஜிநகர், கே.ஆர்.புரம், மகாலட்சுமி லேஅவுட், யஷ்வந்தபுரம், ஹொசகோட்டை, விஜயநகரா, ராணிபென்னூர், ஹிரிகேரூர், கோகாக் உள்ளிட்ட 15 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. 6 மணி வரை நடைபெறும் இடைத்தேர்தலில் 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 37.77 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
15 தொகுதிகளிலும் பாஜக - காங்கிரஸ் இடையே நேரடி போட்டி; 12 தொகுதிகளில் மஜத களம் காண்கிறது.15 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 9ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுகின்றன.
17 காங்கிரஸ் - மஜத அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 17 பேரில் 2 பேரின் வெற்றிக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளதால் 2 தொகுதிகளில் தேர்தல் கிடையாது.
newstm.in
newstm.in