Logo

சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சைப்ரஸ் நாடு மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் உறையும், அஞ்சல்தலையையும் வெளியிட்டுள்ளது.
 | 

சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்தையொட்டி, சைப்ரஸ் நாடு  மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் உறையும், அஞ்சல்தலையையும் வெளியிட்டுள்ளது. 

சைப்ரஸ் ஒரு யூரேசிய தீவு நாடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினர், கிழக்கு மத்தியதரைக் கடலில், கிரேக்கத்திற்கு கிழக்கே, துருக்கியின் தெற்கே, சிரியாவின் மேற்கிலும், எகிப்தின் வடக்கிலும் உள்ளது. இது மத்தியதரைக் கடலில் மூன்றாவது பெரிய தீவாகும்.

1969 ஆம் ஆண்டில் சைப்ரஸ் மகாத்மா காந்தியின் 100 வது பிறந்தநாள் விழாவில் (1869 -1969) 2 முத்திரைகளுடன் மகாத்மா காந்தியை கொளரவித்தனர். இந்நிலையில், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட சிறப்பு அஞ்சல் உறையும், அஞ்சல் தலையையும் கடந்த செப்.10ஆம் தேதி சிறப்பு அஞ்சல் முத்திரையுடன் வெளியிட்டுள்ளது.

சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை!

சிறப்பு அஞ்சல் உறையில் காந்தி உருவமும், அஞ்சல்தலையில் மார்பளவு காந்தி, ராட்டை படமும் இடம்பெற்றுள்ளது. மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் இச்சிறப்பு அஞ்சல் உறையை சேகரித்துள்ளார். 

மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு எண்கோண வடிவ அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.  ஒவ்வொரு அஞ்சல் தலையும் 25 ரூபாய் மதிப்புடையதாகும். அஞ்சல் தலையில் மகாத்மா காந்தியின் மாணவப்பருவம், வழக்கறிஞர் , மகாத்மா காந்தி கஸ்தூரிபாய் புகைப்படம்,  ரயில் வண்டியில் இருந்து மகாத்மா காந்தி இறங்கும் படம், தீயதை பார்க்காதே, தீயதை பேசாதே, தீயதை கேட்காதே கருத்தை உணர்த்தும் மூன்று குரங்குகள் அஞ்சல்தலைகள் இடம்பெற்றுள்ளன.

சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை!

அஞ்சல் தலைகளின் பின்புறம் மகாத்மா காந்தி பிறந்த இடம், வழக்கறிஞர் அலுவலகம் , பிரச்சாரம் செய்யும் படம், வெளிநாட்டு தலைவர்கள் படமும் இடம்பெற்றுள்ளது. இத்தபால் தலையினை மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்  வாங்கி வருகிறார்கள். திருச்சிராப்பள்ளி தலைமை தபால் தலை அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் விற்பனை தொடங்கியுள்ளது.

சைப்ரஸ் நாடு வெளியிட்ட மகாத்மா காந்தி அஞ்சல் உறை, அஞ்சல்தலை!

ஐந்து தபால்தலை கொண்ட குறுவடிவ அஞ்சல் தலை தொகுப்பானது 150 ரூபாய் விலை ஆகும். திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஷிடம் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார், சதீஷ் தாமோதரன் கார்த்தி லால்குடி விஜயகுமார் உட்பட பலர் வாங்கி சென்றார்கள்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP