சந்திர கிரகணம்: தஞ்சை பெரிய கோயில் நடை சாத்தப்பட்டது
சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக, சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடையும் சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Jul 17, 2019, 02:20 IST
| சந்திர கிரகணத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் நடை சாத்தப்பட்டது. முன்னதாக, சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலின் நடையும் சாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு சந்திர கிரஹணம், இன்று நள்ளிரவு துவங்கி நாளை அதிகாலை வரை நடைபெறுகிறது. நம் நாட்டில் நாளை அதிகாலை 1.31 மணிக்கு தொடங்கி காலை 4.30 மணி வரை கிரகணம் நீடிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் பூமி வரும்போது, பூமி, சூரியனை பகுதி அளவாகவோ, முழுமையாகவோ மறைக்கும். இது நிலவில் எதிரொலிக்கும் அற்புத நிகழ்வு தான் சந்திர கிரகணமாகும்.
newstm.in
newstm.in