2ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தல்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில், 76.19% வாக்குகள் பதிவாகின.
இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலையொட்டி வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதோடு, பாதுகாப்பிற்காக போலீசார் தயார் படுத்தப்பட்டுள்ளனர்.
Newstm.in
newstm.in