காசிமேடு மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுரை
சென்னை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
Nov 7, 2019, 22:18 IST
| சென்னை, காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு காசிமேடு மீன்வளத்துறை அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், நவம்பர் 10ஆம் தேதி வரை கடலுக்கு செல்லக்கூடாது என காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். புல்புல் புயல் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
newstm.in
newstm.in