ஜெயலலிதா பெயரில் கலைமாமணி விருது, இனி 5 சவரன் தங்கம்: முதல்வர் அறிவிப்பு
ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Aug 14, 2019, 00:50 IST
| ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகளும், அத்துடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ‘ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும். கலைமாமணி விருதுடன் 3 சவரன் தங்கத்திற்கு பதிலாக இனி 5 சவரன் தங்கம் வழங்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
மேலும், நலிந்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in