52,020 பேருக்கு வேலை வாய்ப்பு! முதல்வர் எடப்பாடி அதிரடி!
அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மருத்துவ கல்லூரி அமைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளதாக முதலைமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான தேர்வான 2,721 செவிலியர்கள், 1782 கிராம சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது பேசிய முதலமைச்சர், " அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மருத்து கல்லூரி அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 9 மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சுகாதாரத்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகவும், முன்மாதிரி மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
Newstm.in
newstm.in