கனமழை: பெண் போலீஸ் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைப்பு
விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Nov 30, 2019, 15:11 IST
| விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு மழையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமைழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த மழையால் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமைழை பெய்து வருகிறது. இதனால், விழுப்புரத்தில் இன்று நடைபெறவிருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக இன்று நடைபெறவிருந்த பெண் காவலர் பணிக்கான உடல்திறன் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என்றும் விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in