Logo

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்....பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறையா?

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்பதால், பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

தமிழகத்தில் கனமழை நீடிக்கும்....பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறையா?

தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்பதால், பள்ளிகளுக்கு  நாளையும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சென்னையை தவிர்த்து சில மாவட்டங்களில் சனி மற்றும் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக சில கல்லூரிகள் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில்  8 மாவட்டங்களில் கனமழையும், 4 மாவட்டங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்;இடைவெளி விட்டு சேலசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் இன்று தெரிவித்தது.

இதனால், பள்ளிகளுக்கு நாளையும் விடுமுறை அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழையை பொறுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு இரவிலோ அல்லது நாளை காலை வெளியாகலாம் என்று தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP