Logo

சிலை கடத்தலுக்கு முக்கிய காரணம் இவர் தான்: எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் விவகாரத்தில் ஐஜி பொன்.மாணிக்கேவல் விசாரணை கமிஷனை முடக்கி, சிபிஐக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், ட்விட்டரில் எச். ராஜா முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 | 

சிலை கடத்தலுக்கு முக்கிய காரணம் இவர் தான்: எச்.ராஜா பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் விவகாரத்தில் ஐஜி பொன்.மாணிக்கேவல் விசாரணை கமிஷனை முடக்கி, சிபிஐக்கு வழக்கை மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தமிழக எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பிய நிலையில், ட்விட்டரில் எச். ராஜா முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

நெட்டிசன் ஒருவர் எச்.ராஜாவிடம், தேசிய கட்சித் தலைவர் ஒருவர், சிலை கடத்தலில் ஈடுபட்டிருப்பதால் தான், விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவு வந்திருப்பதாக  வினவினார். அதற்க்கு, முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் திமுகவின் பெரிய கருப்பன் தான், இந்த வழக்கில் தொடர்புடையவர் என எச்.ராஜா கூறினார். மேலும், "அவரை கைது செய்யும் தைரியம் போன். மாணிக்கவேல் ஐயாவிற்கு தான் உண்டு" என்றும் கூறினார்.

சிலை கடத்தல் வழக்கு சிபிஐ-யிடம் மாற்றப்படுவதில் எந்த உள்நோக்கமும் இல்லை என தமிழக அமைச்சர் மா.ஃபோய். பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP