பாஜக சுப்பிரமணியன் சுவாமியின் மகள் முஸ்லீம் மதத்திற்கு மாறிவிட்டாரா? அதிர வைக்கும் ப்ளஷ்பேக்!!
தீவிர இந்து மத கொள்கை கொண்ட சுப்பிரமணியன் சுவாமியின் மகள் பாஜக மற்றும் மோடிக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வருவது பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்பிரமணியன் சுவாமி தீவிர இந்து மத கொள்கை கொண்டவர். சென்னை மைலாப்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்ட இவர், 1966 ஆம் ஆண்டு ரோக்சனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரோக்சனா தற்போது, இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இவருக்கும் கீதாஞ்சலி, சுகாசினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இதில் கீதாஞ்சலி அமெரிக்காவில் எம்.ஐ.டியில் பேராசியராக உள்ள சஞ்சய் சர்மா என்பவரை திரும் செய்துள்ளார். இந்து ஆங்கில பத்திரிக்கையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் சுகாசினி முன்னாள் வெளியுறவுச் செயலாளராக இருந்த சல்மான்ஹதர் என்பவரின் மகன் நதீம் ஹதரை திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு சுப்பிரமணிய சுவாமி சுஹாசினியுடன் அதிகம் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
தற்போது மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சுஹாசினி தனது அதிகாரி பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனால் சுஹாசினி இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாக விமர்சங்கள் எழுந்துள்ளன.
When the PM himself gives the call on "clothes they wear"... https://t.co/g39HTZLPXn
— Suhasini Haidar (@suhasinih) December 21, 2019
Newstm.in
newstm.in