Logo

சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..

சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..
 | 

சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..

கர்நாடகாவில் 4 ஆம் வகுப்பு படித்த  சிறுமி டிசம்பர் 14ஆம் தேதி தனது சகோதரர் மற்றும் அவரது நண்பர்களுடன் கோவில் திருவிழாவைக் காண சன்னராயபட்னாவுக்கு சென்றுள்ளார். பின்னர் சிறுமி காணாமல் போனதாக வீடு திரும்பிய சிறுவன் வீட்டில் கூறினான். இரவு 7 மணிக்குப் பிறகு தான் அவளைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து உறவினர்களுடன் சேர்ந்து சிறுமியை அனைவரும் தேடினர். அப்போது கோவிலுக்கு அருகில் ஒரு குளத்தில் சிறுமியின் உடல் கிடப்பதை கண்டு பெற்றோர், உறவினர்கள் கதறினர்.

சிறுமியை சீரழித்த கொடூர இளைஞருக்கு கொரில்லா சிறை..சிறுமியின் உடையில் ஒருபகுதி இல்லாமல் இருந்ததால் பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இது தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர் அப்பகுதியைச் சேர்ந்த 21 வயதான சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் சுரேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவில் திருவிழாவில் தனியாக சுற்றிய சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. பின்னர் சிறுமியை கொலை செய்து குளத்துகரையில் வீசி விட்டு சுரேஷ் சென்றதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP