கனமழையால் விமானங்கள் ரத்து! பயணிகள் தவிப்பு!
மதுரை வர வேண்டிய மூன்று இண்டிகோ விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
Dec 2, 2019, 19:54 IST
| மதுரை வர வேண்டிய மூன்று இண்டிகோ விமானங்கள் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் செல்கின்றனர். ரயில்கள், விமானங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், கனமழை காரணமாக, பெங்களூரு, ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் இருந்து மதுரை வர வேண்டிய மூன்று இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in