ஆதார்- பான் கார்டு இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆதார்- பான் கார்டு இணைக்க கால அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசத்தை மார்ச் 31 2020 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
Dec 31, 2019, 02:56 IST
| ஆதார்- பான் கார்டு இணைக்க கால அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசத்தை மார்ச் 31 2020 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
வருமான வரி ஏய்ப்பு, கடன் ஏய்ப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுவதை தடுக்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டப்படி பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவர்களின் பான் கார்டு செயல்பாட்டில் இருக்காது, அதாவது பயனற்றதாகவிடும் என எச்சரித்து இருந்தது.இந்த இணைப்பிற்காக ஏற்கனவே 5 முறை அரசு காலக்கெடு அளித்தது.இதற்கான அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதற்கான அவகாசத்தை மார்ச் 31 2020 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
newstm.in